26 12
இலங்கைசெய்திகள்

தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு

Share

தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு

இலங்கையின் ஏமாற்றமடைந்த தமிழர்கள் இந்த தேர்தலில் பிளவுபட்டுள்ளனர் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கருத்துரைத்துள்ளது.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக தென்னிலங்கைத் தலைமையுடனான ஏமாற்றம் மற்றும் பிளவுபட்ட தமிழ் அரசியல் என்பன அவர்களை வெவ்வேறு தெரிவுகளைக் கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளதாக குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அடுத்தடுத்த அரசாங்கங்களின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில், நீதி மற்றும் அரசியல் தீர்வுக்கான அவர்களின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. இந்தநிலையில் இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒரு வேட்பாளருக்கும் நிச்சயமாக தோற்கக்கூடிய ஒருவருக்கும் இடையில் இரண்டு பிரிவுகளாக மாறியுள்ளனர்.

தமிழர்களில் சிலர், சிங்கள வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள ஒருவருக்கு ஆதரவளித்து வரும் நிலையில், சிலர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் வரைபடத்தின் இலக்கண யதார்த்தத்தின் அடிப்படையில், இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கை தளமாகக் கொண்ட சில அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் கூட்டாக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனால் வெற்றிபெற முடியாது என்பது ஒவ்வொரு தமிழ் வாக்காளருக்கும் நன்றாகத் தெரியும்.

எனினும் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் வாக்காளர்கள் ஆதரிப்பதாக இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...