VideoCapture 20220619 135006
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழகம் – வடக்கு பகுதிகளிடையே கப்பல் சேவையை விரைந்து செயற்படுத்துங்கள்! 

Share

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகுப் போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு – திறக்கப்பட்டு விமான போக்குவரத்து சேவைகள் சுமுகமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டியும் அரசியல் காரணங்களாலும் அது இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் இதனூடாக போக்குவரத்தை தொடங்குவது என்பது வரவேற்க்ககூடிய விடயம். அத்துடன்

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராமேஸ்வரம் – தலைமன்னாரிடையே படகுப் போக்குவரத்து சேவை இடம்பெற்றதுடன் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது.

ஆகவே இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகுப் போக்குவரத்து சேவையையும், தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை ஆரம்பித்தால் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம்

உயர்வடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. வெறுமனே வந்த விமான போக்குவரத்து அமைச்சர் புதிதாக தானே இந்த விமான சேவையை ஆரம்பிப்பது போல சித்தரிக்ககூடாது – என்றார்.

இதேவேளை, வடக்கு – கிழக்கு மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனால் தற்போது தென்னிலங்கை மக்கள் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை நிராகரித்த போதும், கரத்த களரி நிலை ஏற்பட்டபோதும் அரசாங்கம் தனது பதவியை விட்டு விலகாமல் உள்ளது.

ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
செய்திகள்இலங்கை

போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று...

check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக...

1744006431 namal cid 6
செய்திகள்இலங்கை

“திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு அரசுப் பாதுகாப்பில் இடமளிக்க வேண்டாம்”: நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!

அரச பாதுகாப்பில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இடமளிக்க வேண்டாம் என மொட்டுக் கட்சியின் (SLPP)...

25 68fa0ce16e51c
செய்திகள்இலங்கை

“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...