1744006431 namal cid 6
செய்திகள்இலங்கை

“திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு அரசுப் பாதுகாப்பில் இடமளிக்க வேண்டாம்”: நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!

Share

அரச பாதுகாப்பில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இடமளிக்க வேண்டாம் என மொட்டுக் கட்சியின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (அக்டோபர் 23, 2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசியத் திட்டம் மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரபட்சமான செயல்பாடு: “ஒரு குழு செயற்பாட்டில் ஈடுபடுகிறது, ஏனைய குழுவினர் கைது செய்யப்படுகின்றனர். இந்தச் செயற்பாட்டில் மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகிறது.”

போதைப்பொருள் ஒழிப்பு: “எனக்கும் பிள்ளை இருக்கிறது. போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட்டு இளைய தலைமுறைகள் காப்பற்றப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.”

விளையாட்டுத் திட்டங்கள்: “நாங்கள் அன்று அதற்காக விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குப் திட்டங்களை ஆரம்பித்தோம். ஆனால், அதற்கும் நீங்கள் குறை கூறினீர்கள். இவ்வாறான திட்டங்களைச் செய்யுங்கள். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.”

குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கூடாது: “திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் காப்பற்ற வேண்டாம்.”

விசாரணையில் பாரபட்சம்: “மித்தெனிய சம்பவத்திற்குத் தடுத்து வைத்து விசாரிக்கும் ஆணை பிறப்பித்தார்கள். ஆனால் புவக்தண்டாவே சனாவுக்குத் தடுத்து வைத்து விசாரிக்கும் ஆணைப் பிறப்பிக்கவில்லை.”

அரசியல் செய்ய வேண்டாம்: “போதைப்பொருளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். அரசாங்கம் தங்களின் இயலாமையை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறது,” என அவர் குற்றம் சாட்டினார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...