JVP.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்

ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் பெருகிறது!

Share

ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் சிலர் விரைவில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளனர் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் சந்திப்பு நடைபெறும் எனவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

வழமையாக கியூபா நாட்டு தூதுவர் உட்பட மேலும் சில தூதுவர்கள் ஜே.வி.பியுடன் சந்திப்புகளை நடத்துவது வழமை.

ஆனால் இம்முறை பலம்பொருந்தி – இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நாடுகளின் தூதுவர்களை ஜே.வி.பியினரை சந்திப்பதுதான் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

இதற்கிடையில் தெற்கு அரசியலில் பிரதான இரு பாரம்பரியக் கட்சிகளுள் ஒன்றாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஜே.வி.பியுடன் சங்கமிப்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளமையும் தெற்கு அரசியலில் திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...