புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் ஐமுனை போட்டி நிலவுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அநுரயாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையில் இந்த மோதல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் ஐவரும் ஜனாதிபதி வேட்பாளராக எம்.பி.க்களை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்கள் தலையிட்டு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க அக்கட்சியில் இணைந்துள்ள இரண்டு அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவர், அக்கட்சி உறுப்பினர்களை அழைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சியின் முக்கியஸ்தர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும், அவருக்கு ஆதரவளிக்க அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழுவும் தயாராகி வருவதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ளும் நடவடிக்கை மொட்டு கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், ஒன்பது கூட்டுக் கட்சிகளின் குழுவும் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி குழுவும் மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளன.
அக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மேலும் சிலர் சஜித் பிரேமதாசவிற்கும், மேலும் சிலர் டலஸ் அழகப்பெருமிற்கும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர்.
#SriLankaNews
Leave a comment