20220410 131052 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

வலுக்கும் உட்கட்சி மோதல்! – எப்போதும் நானே தலைவர் என்கிறார் ராஜலிங்கம்

Share

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரச்சினை முடிவுக்கு வந்தது என ஆனந்தசங்கரி கூறுகின்றார். ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது என அக்கட்சியின் தம்பையா ராஜலிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்ற ஆனந்தசங்கரி மத்திய செயற்குழு கூட்டத்தை கூட்டி இருந்தார்.

நான் தான் அந்த கட்சியினுடைய தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால் முதலிலேயே தலைவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

என்னுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டத்தை நடத்தினால் யாப்புக்கு முரணானது.

இப்போது கட்சிப் பிரச்சனை முடிவுக்கு வந்தது என ஆனந்தசங்கரி கூறுகின்றார்.ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது. தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் மத்தியகுழு உறுப்பினர் அல்ல. அவர் பொதுச் சபை உறுப்பினர். மத்திய செயற்குழுவில் இல்லாத ஒருவர் அழைக்கப்பட்டு தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

நேற்றைய கூட்டம் தேர்தல் திணைக்களத்தால் ரத்து செய்ய செய்யப்படும் என்பதில் திடகாத்திரமான நம்பிக்கை கொண்டுள்ளோம். இது சம்பந்தமாக உடனடியாக நாங்கள் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அன்றும் இன்றும் நானே – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...