Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டங்களுக்கு பயந்து பதவி விலகமாட்டாராம் கோட்டா!

Share

“எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகமாட்டார்.”

– இவ்வாறு ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சபை முதல்வருமான கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் அமைச்சர் தினேஷ் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காலிமுகத்திடலில் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்க வருவோரை ஒன்றுதிரட்டி ஜனாதிபதிக்கு எதிராகப் போராட வைத்துள்ளனர் எதிரணியினர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் திரண்டு ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு மிரட்டுகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகமாட்டார்.

எமது ஜனாதிபதியோ, அரச தரப்பினரோ குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன்தான் அவர்கள் ஆட்சிப்பீடத்தில் ஏறினார்கள்.

எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியோ அல்லது அரசோ பதவி விலகுவது தீர்வு அல்ல. இன, மத, மொழி, கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைக் காணமுடியும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...

Untitled 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹபராதுவ யுவதியின் மரணம்: மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்து என பிரேதப் பரிசோதனையில் தகவல்

காலி, ஹபராதுவ கொக்வத்தை பகுதியில் கடந்த 3-ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போது...

Untitled 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு: ஒரு அவுண்ஸ் தங்கம் 4,625 டொலராகப் பதிவு

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மைகள்...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பம்: மே 19 வரை கால அவகாசம் நீட்டிப்பு என ஆணைக்குழு அறிவிப்பு

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான...