images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

Share

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது தாயைக் கடுமையாகத் தாக்கி கொலை செய்ததுடன், தன்னையே கூரிய ஆயுதத்தால் தாக்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பதிவானது. இந்தச் சம்பவம் தொடர்பில், சோல்பெர்க்கின் குடும்பத்தினர் ChatGPT-ஐ உருவாக்கிய Open AI நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்தினர் வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து,

இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி Open AI நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். சோல்பெர்க் என்பவர் முன்னதாக முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.

உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட இவர் தனது தாயுடன் வசித்து வந்ததாகவும், ChatGPTக்கு பாபி எனப் பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் உரையாடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். ChatGPT அவருடைய Paranoia மன நோயை மேலும் மோசமாக்கியுள்ளமை இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

“உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன,

அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை” என ChatGPT அவரை நம்பவைத்துள்ளது.

இதன் விளைவாகவே குறித்த நபர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த Open AI நிறுவனம், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...