ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்!

Share

” ஒவ்வொரு மாதத்திலும் 9 ஆம் திகதி மட்டுமல்ல, ஒரு மாதமாவது, மக்கள் கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டுக்காக போராடிய இளைஞர்களை வேட்டையாடி, அவர்களை சிறையில் அடைப்பதற்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் மட்டுமே போராட்டக்காரர்கள் இருப்பதாக அரசு நம்புகின்றது. ஆனால் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் உள்ளனர். மக்கள்தான் போராட்டத்தின் பங்குதாரர்கள். எனவே, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள் புரட்சியை ஒடுக்க முடியாது.

மக்கள் போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க நான் தயார். ஒரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து, நாட்டை மீட்க மக்கள் முன்வர வேண்டும்.” எனவும் பொன்சேகா அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...