Train 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் தொடருந்து நிலைய அதிபர்கள்!!

Share

தொடருந்து நிலைய அதிபர்கள் இன்று (14) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்திருந்த 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு நிறைவடைந்தது.

இந்த நடவடிக்கை காரணமாக பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் தொடருந்து நிலைய அதிபர்கள் மீண்டும் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...