அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்
இலங்கைசெய்திகள்

அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்

Share

அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்

மத்திய கிழக்கு நாட்டிற்கு பணியாளராக சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் 39 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் எஞ்சிய 07 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இவர்கள், சுகவீனங்கள், தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வருவதற்காக 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களை இந்த நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக குவைத் அரசின் உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் விளைவாக இந்த இலங்கையர்கள் தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் அனுப்பப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...