இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Share

“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.”

– இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் இன்று காலை திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்தச் சம்பவத்தை அறிக்கை மூலம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து பொலிஸ் கனரக வாகனங்கள் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...