ranjith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களை விரட்ட எந்த தரப்புடனும் இணையத் தயார்! – எதிர்க்கட்சி ஆணித்தரம்

Share

” ராஜபக்ச அரசை விரட்டுவதற்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மொனறாகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையும், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நிச்சயம் முன்வைக்கப்படும். அதன்பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராஜபக்ச ஆட்சியை விரட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ராஜபக்சக்கள் நாட்டைவிட்டு, வெளியேறுவதை தடுக்க மக்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். கப்ரால் வெளியேறுவதை தடுப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...