300593818 5367868793261952 5469180823014857854 n
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டில் பிளவு! – பீரிஸ், டலஸ் உட்பட 13 எம்.பிக்கள் வெளியேற்றம்!!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் முக்கியமான 13 எம்.பிக்களே இவ்வாறு, ஆளுந்தரப்பில் இருந்து வெளியேறி, எதிரணி பக்கம வந்து, சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தமது அணி ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தது, அதற்கான காரணங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்களை விபரித்தார். விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள மொட்டு கட்சி எம்பிக்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். இதனால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.

சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டு கட்சி எம்பிக்கள் விபரம்

1. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
2. டலஸ் அழகப்பெரும
3. பேராசிரியர் சன்ன ஜயசுமன
4. பேராசிரியர் சரித ஹேரத்
5. கலாநிதி நாலககொடஹேவா
6. கலாநிதி குணபால ரத்னசேகர
7. வைத்தியர் உபுல் கலப்பதி
8. வைத்தியர் திலக் ராஜபக்ச
9. சட்டத்தரணி டிலான் பெரேரா
10.சட்டத்தரணி உதயன கிரிந்திகொட
11.சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார
12.கே.பி.எஸ். குமாரசிறி
13. லலித் எல்லாவல

ஆர்.சனத்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...