3 48
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை! நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Share

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை! நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைபேசி தொடர்பு தடுப்பு சாதனங்களின் (Jammer) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் (Jammer)பொருத்தப்பட்டுள்ள நிலையில், கட்டடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முழுமையாக முடக்க முடியவில்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜாமர்களின் குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளி தரப்பினருடன் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் தங்கியிருந்து கைதிகள் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளை சீரமைக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கும் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பூஸ்ஸ போன்ற தீவிர சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 28 சிறைகள் உள்ளன, அவற்றில் 10 திறந்தவெளி சிறைகள். அந்த 28 சிறைகளில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 29,500. அவர்களில் 1,200 பேர் பெண் கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...