2 54
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் சிறையில் கையடக்க தொலைபேசி!

Share

கணேமுல்ல சஞ்சீவவின் சிறையில் கையடக்க தொலைபேசி!

நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு கணேமுல்ல சஞ்சீவ தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து ஒரு கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சிறைச்சாலை தரப்பு மேற்கொண்டு வரும் விசாரணைகளின்படி, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிகாரிகள் உட்பட 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை வட்டார தகவல்களின்படி, பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு அதிகாரிகள் மற்றும் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணைகள் சிறைச்சாலைகளின் உதவி கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீது நேற்று (26) நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்புப் பிரிவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று காலை, மினுவங்கொடை – பத்தடுவன பகுதியில், கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீது அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது காலிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கம்பஹா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் அல்ல என்றாலும், அவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, அவரது கூட்டாளிகள், கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் பகை தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இன்றைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...