5 51
இலங்கைசெய்திகள்

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

Share

அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் தலைவர்களின் அணுகுமுறை மாறவேண்டும்!

எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நாட்டின் அரசியல் தலைவர்களின் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்த ‘தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற நிலையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், அவற்றின் தலைவர்கள், தேசிய நலனைப் பற்றி சிந்திப்பதில்லை.

மாறாக, அடுத்த தேர்தலில் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்கள், அவர்கள் வெற்றி பெற முடியுமா இல்லையா என்பது பற்றி சிந்திக்கிறார்கள்.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் மிகச் சிறந்த திட்டத்தை நாசப்படுத்தினாலும் கூட, அவர்களுக்கு கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, முதலில் அரசியல் நெறிமுறைகள் மாற வேண்டும் நிச்சயமாக ‘அரகலய’ என்ற காலிமுகத்திடல் போராட்டம் அதை மாற்றியது.

அந்த போராட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை பாரம்பரிய அரசியல் கட்சிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையில் ஏற்கனவே பல அரசியலமைப்பு வரைவுகள் உள்ளன.

அவற்றை ஒன்றாக இணைத்து இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒன்றை வரைவது மிகவும் எளிதாக இருக்கும். இந்தநிலையில், தலைவர்களின் அரசியல் சூழ்நிலையை, அரசியல் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள், அரசியலமைப்பை நிராகரித்துள்ளனர் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் கட்சி அதை நிராகரித்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்று தமக்கு தெரியவில்லை, என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...