varna scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ணராமேஸ்வரன் காலமானார்

Share

மாவீரர் நாளில்  துயிலுமில்லங்களில் ஒலிக்கப்படும் ‘தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…’ எனும் உணர்ச்சிகரமான பாடல்  உட்பட பல பாடல்களை பாடிய சங்கீத, மிருதங்க கலாவித்தகர், இசைக் கலைமாமணி வர்ணராமேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இவர் இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இசைக்கலைஞராக விளங்கியுள்ளதோடு பல நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்துமுள்ளார்.

போர்ச் சூழல் காரணமாக கனடாவில் புலம்பெயர்ந்து குடியேறிய இவர் அங்கு தமிழிசை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு பல பகுதிகளிலும் இசை வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கனடாவில் காலமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரது தமிழீழ தாயகப் பாடல்கள் சாகா வரம் பெற்று இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...