Corona
இலங்கைசெய்திகள்

சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

Share

சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அதற்கிணங்க இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 30 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்..

பொதுமக்கள் நடைமுறையில் உள்ள சட்ட நியதிகளை பின்பற்றி முகக் கவசத்தை அணிதல்உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை 50 வீத மக்கள் மட்டுமே இதுவரை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 60 வயதிற்கு மேற்பட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் இதுவரை முதலாவது தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...