sdsd
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!

Share

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கிழங்கு, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களின் சங்கத்தால் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் எதிர்வரும் நாட்களில் நாட்டில் அத்தியாவசிய இறக்குமதி பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தட்டுப்பாடு காரணமாக பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அதன் ஊடக பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது வரையிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை ஏற்றிவந்த கொள்கலன் துறைமுகத்தில் சிக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக குறைந்தபட்சம் 100 -– 110 மில்லியன் டொலர் பணம் மாதாந்தம் செலவிடப்படுகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

#Srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...