vijaya
இலங்கைசெய்திகள்

ஆங்கில மொழி வர்த்தமானி ரத்து!

Share

சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் சபையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தான் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும் முன்னர் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியை பாராளுமன்றத்தின் ஊடாக ரத்துச்செய்ய முடியும் என்றும் அதற்கிணங்க, வர்த்தமானியை இரத்துச்செய்யும் வகையில் அடுத்த வாரம் யோசனை ஒன்றை முவைக்கவுள்ளதாகக் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைக்கு இணங்கவே இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...