rtjy 14 scaled
இலங்கைசெய்திகள்

விலை அதிகரிப்படவுள்ள பாடசாலை உபகரணங்கள்

Share

விலை அதிகரிப்படவுள்ள பாடசாலை உபகரணங்கள்

மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் என்பற்றின் விலை அதிகரிப்பினால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலம், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதால் விலையை அதிகரிக்காமல் நிறுவனங்களை நடத்த முடியாதுள்ளதாகவும் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் தொடங்கவுள்ள நிலையில் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு தயாராகுவோரின் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் குறைந்த விலையில் பயிற்சிப் புத்தகங்களை அச்சிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...

கொத்மலை
இலங்கை

திறக்கப்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை...

mon
இலங்கை

5,000 மில்லியன் டொலர்களைக் கடந்த வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த...