278368329 533420374810866 6444192985736388179 n
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணைகள் குறித்து சஜித் அணி நாளை பேச்சு!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராகக் கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு நாளை பேச்சு நடத்தவுள்ளது.

குறித்த பிரேரணைகளை, சபாநாயகரிடம் கையளிக்கும் காலம் தொடர்பில், இந்தக் கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துரையாடப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வாரத்தால் பிற்போடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சமகால பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன், நாளைமறுதினம் நடைபெறவுள்ள பேச்சுக்கு அது தாக்கம் செலுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுறுத்தலைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...