Sajith Vavuniya
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

வடக்கில் சஜித்!

Share

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது.

வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித் பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளார்.

மறுநாள் 08 ஆம் திகதி மன்னார் வருகின்றார். மடுதேவாலயம், திருக்கேதீஸ்வரம் ஆகிய புனித தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். மன்னார் ஆயரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனவரி 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். காலை 8.30 மணிக்கு ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் நயினாதீவு செல்லவுள்ளார். நயினா தீவு விகாரை மற்றும் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அமரர். ராஜமஹேந்திரனின் நினைவாக தெல்லிப்பளை தள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது.

மாலை 3.30 மணிக்கு திருநகரில் அரசியல் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடரிலும் மாலை 5 மணிக்கு பங்கேற்பார்.

யாழ். வியாபார சமூகத்துடனான சந்திப்பு இரவு 7 மணிக்கு யூஎஸ் ஹேட்டலில் இடம்பெறவுள்ளது. 10 ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு
பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

11 ஆம் திகதி மீண்டும் யாழ். வருவார். தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளார். 12 ஆம் திகதியும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுளளன. யாழ். ஆயரை அன்றைய தினம் சந்திப்பார். நல்லூர் கோவிலுக்கும் செல்வார்.

வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்  இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...