Sajith Vavuniya
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

வடக்கில் சஜித்!

Share

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது.

வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித் பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளார்.

மறுநாள் 08 ஆம் திகதி மன்னார் வருகின்றார். மடுதேவாலயம், திருக்கேதீஸ்வரம் ஆகிய புனித தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். மன்னார் ஆயரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனவரி 09 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். காலை 8.30 மணிக்கு ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் நயினாதீவு செல்லவுள்ளார். நயினா தீவு விகாரை மற்றும் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அமரர். ராஜமஹேந்திரனின் நினைவாக தெல்லிப்பளை தள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது.

மாலை 3.30 மணிக்கு திருநகரில் அரசியல் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடரிலும் மாலை 5 மணிக்கு பங்கேற்பார்.

யாழ். வியாபார சமூகத்துடனான சந்திப்பு இரவு 7 மணிக்கு யூஎஸ் ஹேட்டலில் இடம்பெறவுள்ளது. 10 ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு
பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

11 ஆம் திகதி மீண்டும் யாழ். வருவார். தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளார். 12 ஆம் திகதியும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறவுளளன. யாழ். ஆயரை அன்றைய தினம் சந்திப்பார். நல்லூர் கோவிலுக்கும் செல்வார்.

வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால்  இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...