train nnn
இலங்கைசெய்திகள்

ரயில் சேவை மீள ஆரம்பம்?

Share

பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்.

இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக ரயில் சேவை முடக்க நிலையில் உள்ளதால் புகையிரதத் திணைக்களத்துக்கு 500 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க திணைக்கள மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...