கடந்த காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தாலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழர் பேரவையின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் உட்பட 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு – திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு – கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment