மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்
இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்

Share

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் பதிவாகும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் எவ்வளவு பெரிய மதுபான நிறுவனம் குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மதுபான தொழிற்சாலைகளையும் கண்காணிப்பதற்கு கலால் திணைக்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கலால் திணைக்கள அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 8000 போலி மது போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுபான நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை குறைக்க போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்துவதால், கடந்த காலங்களில் மது வரி வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...