douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் முகத்தில் வெளிச்சத்தை கொண்டு வந்தவர் ரணில்! – டக்ளஸ் புகழாரம்

Share

எதிர்க்கட்சிகள் பொதுவாக எதிரிக்கட்சிகளாக செயற்படுகின்ற நிலைமை தான் பொதுவாக காணக்கூடியதாக இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய இந்த நாடு தலைமைத்துவம் இல்லாமல் இக்கட்டான நிலையில் ஆதாள பாதாளம் நோக்கி விழுந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்தி அதை முன்னேற்ற பாதையில் கொண்டு போவேன் என்ற உறுத்திப்பாட்டோடு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்திருக்கின்றார்.

குறுகிய காலத்தில் இருட்டில் உள்ள எங்களிற்கு முகத்தில் வெளிச்சம் தெரிகிறது. அந்த வெளிச்சம் எமக்கு கிட்ட வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தான் இதனை நாங்கள் பார்க்க வேண்டும்.

கடந்த காலத்தில் பயங்கரவாத சட்டம் என்பது, ஒரு இனப்பிரச்சினை இருந்தபடியினால் அதனால் ஒரு பகுதி மக்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்களிற்கான சட்டமாக தான் கொண்டுவரப்படுகின்றது.

இதற்குள் இனவாதமோ, மதவாதமோ இருக்காது ஆனால் இதுவரை முடிவாக இது எடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துக்கூடாகத் தான் அது சட்டமாக்கப்படும்.

பல பேர் பலவிதமாக கதைக்கின்றனர். இந்த சட்டத்தை பார்த்து வாசித்திருக்க முடியாது. விரைவில் வெளியு வரும். பாராளுமன்ற வாத பிரதிவாதங்களிற்கு பின்னரே அது நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...