Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களுக்கு விரைவில் அமைச்சு பதவி!

Share

” ராஜபக்சக்களுக்கு பதவிகளை வழங்குவதற்கானதொரு ஒத்திவையாகவே சஷீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.” – என்று ‘உத்தர லங்கா சபாவ’ (மேலவை இலங்கை கூட்டணி) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியவருக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்சக்களின் அரசியலை நாட்டு மக்கள் நிராகரித்தனர். அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.

ஆனால் சஷீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னிணியில் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் சூத்திரம் செயற்படுகின்றது. அதாவது ராஜபக்சக்களுக்கு மீண்டும் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கான நகர்வே இது. சஷீந்திரவுக்கு இராஜாங்கம் வழங்கினால், நாமலுக்கு கட்டாயம் அமைச்சு பதவியொன்று வழங்கப்பட வேண்டும். இதுதான் அவர்களின் நோக்கம்.

அதேவேளை, எமது கூட்டணியில் மொட்டு கட்சிக்கு இடமில்லை. எனினும், மொட்டு கட்சியில் இருக்கும் – மனசாட்சியுடன் செயற்படும் தரப்புக்கு இடமளிக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...