rtjy 268 scaled
இலங்கைசெய்திகள்

மாவீரர் நினைவேந்தலுக்கு கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்

Share

மாவீரர் நினைவேந்தலுக்கு கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் சக உறவினர் ஒருவரிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(28.11.2023) உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2021 ம் ஆண்டு அதிஷ்ட லாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித நபரிடம் அவரின் மனைவியின் உறவினரான மச்சான் முறையான நபர் தான் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2023) அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் பணம்கிடைத்த உறவினரிடம் சக உறவினர் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளமை தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கப்பம் கோரிய நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...