rtjy 267 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

Share

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற நிவாரணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட போதிலும் சுங்க திணைக்களத்தினால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகளினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்காமல் இருப்பது வருத்தமளிக்கும் விடயம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...