மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை
ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்படுகின்ற சிங்கள மொழியிலான “பலவேகய”,தமிழ் மொழியிலான “ஐக்கிய குரல்”பத்திரிகையின் மின்னிதழ் அதனோடிணைந்த ஒன்றித்த இணையதள அங்குரார்பண நிகழ்வில் நேரலையாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய ஊடக வழிமுறைகளுக்கு அப்பால் சென்ற மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற, நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாக, பொய்யை உருவாக்காத உண்மையையையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்ட தகவல் பறிமாற்ற வலையமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்
சில தரப்பினர் பொய்யான தகவல்களைக்கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
அத்துடன் இந்த ஆரம்பகட்ட முயற்சியுடன் இணைந்ததாக கிராமிய மட்டங்கள்தோறும் சரியான தகவல்களை வழங்கக்கூடிய ஊடகக்கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டார்.