நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும் லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் தகவல்களை உள்ளடக்கிய தமிழின நீதிக் கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நூல் வெளியிடப்பட்டது.
மேலும், கறுப்பு ஜுலை உள்ளிட்ட இனப் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சட்டதரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் காணொளி வாயிலாக உரையாற்றி இருந்ததுடன் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

