hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

‘பண்டோரா அக்கா’ – நிருபமா ராஜபக்சவுக்கு பெயர் சூட்டினார் ஹிருணிக்கா

Share

‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பண்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிருபமா ராஜபக்ச ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தால்கூட, அவர் பதுக்கிய பணம் 800 வருடங்களுக்கு போதுமானது. கொள்ளையடிப்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் குடும்பமும் அப்படிதான். இங்குள்ள வளங்களை, பணத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

2022 ஆம் ஆண்டுவரும்போது நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அன்றே நான் சொன்னேன். ஆனால் 2021 இலேயே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. தற்போது மக்கள் கொடுப்பாவிகளைதான் எரிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஆட்சியாளர்களையே தாக்குவார்கள் என்பது உறுதி.

நாட்டை சீரழித்த பின்னர் ராஜபக்சக்கள் அமெரிக்கா சென்றுவிடுவார்கள். இது உறுதி. நான் சொல்வதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ராஜபக்சக்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...