சீனா கட்டிய பாகிஸ்தான் போர்க் கப்பல் PNS Taimur கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்தது.
இதில் அதிநவீன ஆயுதங்கள், சென்சர் கருவிகள் மற்றும் லேசர் உதவியுடன் இயங்க கூடிய ஏவுகணைகளை கொண்ட அந்த போர் கப்பலாகும்.
மலேசியா மற்றும் கம்போடியா நாடுகளில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் திரும்பும் அந்த கப்பலை நிறுத்தி வைக்க பங்களாதேஷிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் பங்களாதேஷ் அனுமதி மறுத்த நிலையில், அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதியளித்தது. எதிர்வரும் 15 ஆம் திகதி கராச்சி திரும்பவுள்ளது.
இதேவேளை சீன செயற்கைகோள் உளவு கப்பல் யுவான் வேங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வரவிருந்த போதும் வேகத்தை குறைத்து பயணிக்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து 600 கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திரத்தில் பயணிக்கின்றது.
துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என ஹாபர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews