K4 A 02
இலங்கைசெய்திகள்

ஜெனிவாவில் கோள் மூட்டும் எதிர்க்கட்சிகள்!

Share

” ஜெனிவா தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக குரல் கொடுக்காமல்,  கோள் மூட்டும் நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவலையடைகின்றது”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன கூறியவை வருமாறு,

” எமது நாடு தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டுக்காகவும்,  மக்களுக்காகவும் சர்வதேச தளத்தில் உதவிகளை கோராமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே எதிரணிகள் முன்னெடுத்துவருகின்றன.

கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அரசியல் போட்டி ஏற்படலாம். அதனை தேர்தல் காலத்தில் உள்நாட்டில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சர்வதேச தளத்தில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை நாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையை எமது நாட்டு எதிரணிகள் பின்பற்றுவதில்லை.

ஆங்காங் சூகி கைது செய்யப்பட்டு,  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.  மியன்மாருக்கு தடைவிதிக்க உலக நாடுகள் முன்வந்தன. ஆனால் நாடுமீது தடைவிதிக்க வேண்டாம், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆங்காங் சூகி நாட்டுக்காக குரல் கொடுத்தார்.

மும்பை தாக்குதலின் பின்னர், இந்தியாவில் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த பிஜேபி தலைவர் சர்வதேசத்திடம் உதவி கோரினார். எமது நாட்டு எதிர்க்கட்சிகளிடம் அந்த சிந்தனை – எண்ணப்பாடு இல்லை. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...