Lotus Tower
இலங்கைசெய்திகள்

தாமரைக் கோபுரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள்!

Share

தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 15 உற்சவங்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் முடிவடைந்தது. சீன நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் நிதியை 2024 ஆம் ஆண்டுக்குள் மீளச் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் தாமரைக் கோரத்தை பார்வையிடுவதற்கு 500 ரூபா மற்றும் 2,000 ரூபா பிரவேசச் சீட்டுக்களை பெற்று அதனைப் பார்வையிடமுடியும் என்றும் வெளிநாட்டவர் 20 டொலரை கட்டணமாக செலுத்தி அதனைப் பார்வையிட முடியுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...