elec
இலங்கைஅரசியல்செய்திகள்

மின் கட்டணங்களுக்கு சலுகை?

Share

மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹொட்டல்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அக் கால அவகாசம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண சலுகை தொடர்பில்,ஹொட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை வழமைக்குக் கொண்டுவர மேலும் சில மாதங்கள் தேவை – என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...