கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எமது நாட்டுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எமது நாட்டுக்கு 123 கோடி ரூபா மதிப்பில் உணவு, பால்மா , மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு அனுமதி வழங்கிட இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் இந்திய மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்.
இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து எந்த மாதிரி நடவடிக்கைகள் தேவை என்பதை இலங்கை அரசு பரிசீலனை நடத்திவருகிறது.
தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகளை தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்.
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. – என்றார்.
#SriLankaNews
Leave a comment