vikneshwaran
அரசியல்இலங்கைசெய்திகள்

13 ஆல் தீர்வு கிடைக்காது!!

Share

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும், அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு  கருத்து வெளியிடும் போதே அவர் நேற்று (08) இதனை கூறினார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் நிறைவேற்றும் என்று கூறிய அவர் தான் முதலமைச்சராக இருந்த போது, இதனை நன்றான உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.

இதனால், சமஷ்டியை கோருவதுடன்,  தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சிறந்தது என்றும், அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இடையில் என்ன நடக்கும் என்பது தெரியாத என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தற்போது தீர்வை தருவதாக கூறியுள்ள நிலையில், நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....