தனியார் பஸ் சேவைகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிகையில்,
தனியாருக்கு சொந்தமான பஸ்கள் இன்று காலை முதல் தமது சேவையை இடைநிறுத்தியுள்ளன. 111 ரூபாவால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஸ்களுக்கு நாளொன்றுக்கு 11,000 ரூபா நட்டம் ஏற்படும்.
இதனை கருத்திலெடுத்து, பஸ் உரிமையாளர்ளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்காவிட்டால் பஸ் கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
இதேவேளை, குறைந்த பஸ் கட்டணமான 27 ரூபா 35 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment