Sri Lanka Podujana Peramuna slpp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டு எம்பிக்களை ஒன்றிணைக்க புதிய கூட்டணி

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை பொதுவானதொரு கூட்டணியின்கீழ் ஒன்றிணைப்பதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான அரசியல் ரீதியிலான நகர்வுகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

மொட்டு கூட்டணியில் இருந்து வெளியேறிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அத்துரெலிய ரத்தன தேரர் உட்பட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து ‘மேலவை இலங்கை கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

அதேபோல டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 எம்.பிக்கள் அடங்கிய குழுவும், ‘சுதந்திர மக்கள் சபை’ எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளது.

அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயற்படுகின்றனர். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தற்போது தனித்தே இயங்கிவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி கட்சிகளை – சக்திகளை ஒரு குடையின் – கூட்டணியின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...