277436465 5120352351357922 1168270418110427463 n
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம்! – ஐ.தே.க வலியுறுத்து

Share

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றதுடன், பொது இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றை வலியுறுத்தினர்.

சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வெள்ளை அணி அணிந்திருந்தனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பவில்லை. ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்தவில்லை. மாறாக நாட்டை மீட்பதற்கான தேசிய வேலைத்திட்டம் வேண்டும் என்றே கருத்து வெளியிட்டனர்.

சத்தியாக்கிரக போராட்டத்தின் நிறைவில், எமது நாட்டை ஒன்றிணைந்து காப்போம் என சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ளாதபோதிலும், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

277248570 5120354934690997 5714042106926061799 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...