kamban.j
இலங்கைசெய்திகள்

கம்பன் கழகம் நடத்தும் ‘முந்துதமிழ்’ நிகழ்வு

Share

அகில இலங்கை கம்பன் கழகமும் அவுஸ்திரேலிய கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் ‘முந்துதமிழ்” எனும் மாதாந்த இயலரங்கின் செப்டெம்பர் மாத நிகழ்வு நாளை மறுதினம் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்நிலை நிகழ்வாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிவாச்சாரியார் சிவஸ்ரீ இந்திரன் குருக்களின் மங்கல ஆராத்தியோடு ஆரம்பமாகவுள்ளது.

நிகா்வில் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கண.சிற்சபேசன்ஐயாவின் தலைமையில் ‘ஊழிற்பெருவலியாவுள’ என்ற பொருளிலான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

சிலப்பதிகாரத்தில் ஊழ் பேராசிரியர்.ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் திருக்குறளில் ஊழ் பேராசிரியர். இ.இராமச்சந்திரன் அவர்களும் கம்பராமாயணத்தில் ஊழ் புலவர் இரா.இராமமூர்த்திஅவர்களும் விரித்துரைக்க உள்ளனர்.

உலகெங்கிலும் நோயும் அச்சமும் நிறைந்திருக்கும் இன்றைய நிலையில் நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமானதாக சொல்லப்படும் ஊழின் வலியை அறிந்து பயன்பெற பெரியோர்கள் கூடி துணைசெய்ய இருக்கிறார்கள். இந்நிகழ்வை அனைவரும் கண்டுகளித்து பயன்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முந்துதமிழ் நிகழ்வு இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...

25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...