kamban.j
இலங்கைசெய்திகள்

கம்பன் கழகம் நடத்தும் ‘முந்துதமிழ்’ நிகழ்வு

Share

அகில இலங்கை கம்பன் கழகமும் அவுஸ்திரேலிய கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் ‘முந்துதமிழ்” எனும் மாதாந்த இயலரங்கின் செப்டெம்பர் மாத நிகழ்வு நாளை மறுதினம் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்நிலை நிகழ்வாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிவாச்சாரியார் சிவஸ்ரீ இந்திரன் குருக்களின் மங்கல ஆராத்தியோடு ஆரம்பமாகவுள்ளது.

நிகா்வில் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கண.சிற்சபேசன்ஐயாவின் தலைமையில் ‘ஊழிற்பெருவலியாவுள’ என்ற பொருளிலான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

சிலப்பதிகாரத்தில் ஊழ் பேராசிரியர்.ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் திருக்குறளில் ஊழ் பேராசிரியர். இ.இராமச்சந்திரன் அவர்களும் கம்பராமாயணத்தில் ஊழ் புலவர் இரா.இராமமூர்த்திஅவர்களும் விரித்துரைக்க உள்ளனர்.

உலகெங்கிலும் நோயும் அச்சமும் நிறைந்திருக்கும் இன்றைய நிலையில் நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமானதாக சொல்லப்படும் ஊழின் வலியை அறிந்து பயன்பெற பெரியோர்கள் கூடி துணைசெய்ய இருக்கிறார்கள். இந்நிகழ்வை அனைவரும் கண்டுகளித்து பயன்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முந்துதமிழ் நிகழ்வு இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...