kamban.j
இலங்கைசெய்திகள்

கம்பன் கழகம் நடத்தும் ‘முந்துதமிழ்’ நிகழ்வு

Share

அகில இலங்கை கம்பன் கழகமும் அவுஸ்திரேலிய கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் ‘முந்துதமிழ்” எனும் மாதாந்த இயலரங்கின் செப்டெம்பர் மாத நிகழ்வு நாளை மறுதினம் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்நிலை நிகழ்வாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிவாச்சாரியார் சிவஸ்ரீ இந்திரன் குருக்களின் மங்கல ஆராத்தியோடு ஆரம்பமாகவுள்ளது.

நிகா்வில் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கண.சிற்சபேசன்ஐயாவின் தலைமையில் ‘ஊழிற்பெருவலியாவுள’ என்ற பொருளிலான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

சிலப்பதிகாரத்தில் ஊழ் பேராசிரியர்.ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் திருக்குறளில் ஊழ் பேராசிரியர். இ.இராமச்சந்திரன் அவர்களும் கம்பராமாயணத்தில் ஊழ் புலவர் இரா.இராமமூர்த்திஅவர்களும் விரித்துரைக்க உள்ளனர்.

உலகெங்கிலும் நோயும் அச்சமும் நிறைந்திருக்கும் இன்றைய நிலையில் நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமானதாக சொல்லப்படும் ஊழின் வலியை அறிந்து பயன்பெற பெரியோர்கள் கூடி துணைசெய்ய இருக்கிறார்கள். இந்நிகழ்வை அனைவரும் கண்டுகளித்து பயன்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முந்துதமிழ் நிகழ்வு இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...