images 7 6
இலங்கைஅரசியல்செய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

Share

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று (24) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தினால் மீண்டும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே பிணையில் இருந்த அர்ச்சுனா, நேற்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணைக்கு இணங்க இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை மீண்டும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா, சபையில் தனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...