images 6 7
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி தமிழ் மக்களுக்குச் சொந்தமானது – நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அதிரடி வெளிப்பாடு!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது மக்களின் தனிப்பட்ட காணிகளை ஆக்கிரமித்தே உருவாக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி காங்கேசன்துறை தையிட்டி பகுதி மக்களுக்குச் சொந்தமானதாகும். யுத்த காலத்தில் சிவில் மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்தக் காணியில் திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

போலியாக அமைக்கப்பட்ட இந்த விகாரையின் விகாராதிபதிக்கு, பௌத்த தர்மத்திற்கு மாறாக ‘வடக்கு பிராந்திய பிரதான சங்கநாயக்க’ பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

புதிய தேரர் ஒருவர் தையிட்டிக்கு வந்து, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி புதிய கட்டடங்களை எழுப்பி வருவதாகவும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

53 வருடங்களாக நயினாதீவில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய தேரர், இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

“அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஏனைய தேரர்கள் இது குறித்துத் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும். முறையான தீர்வு கிடைக்காவிடின், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும்” என அவர் விடுத்துள்ள காணொளியில் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...