images 6 7
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி தமிழ் மக்களுக்குச் சொந்தமானது – நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அதிரடி வெளிப்பாடு!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது மக்களின் தனிப்பட்ட காணிகளை ஆக்கிரமித்தே உருவாக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி காங்கேசன்துறை தையிட்டி பகுதி மக்களுக்குச் சொந்தமானதாகும். யுத்த காலத்தில் சிவில் மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்தக் காணியில் திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

போலியாக அமைக்கப்பட்ட இந்த விகாரையின் விகாராதிபதிக்கு, பௌத்த தர்மத்திற்கு மாறாக ‘வடக்கு பிராந்திய பிரதான சங்கநாயக்க’ பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

புதிய தேரர் ஒருவர் தையிட்டிக்கு வந்து, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி புதிய கட்டடங்களை எழுப்பி வருவதாகவும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

53 வருடங்களாக நயினாதீவில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய தேரர், இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

“அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஏனைய தேரர்கள் இது குறித்துத் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும். முறையான தீர்வு கிடைக்காவிடின், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும்” என அவர் விடுத்துள்ள காணொளியில் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...