அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் 11 கட்சிகள் அணி ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் இதற்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில், அடுத்த நாடாளுமன்ற அமர்விலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கப்படலாம் என தெரியவருகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு குறைந்தபட்சம் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் அவசியம். அந்த பலம் 11 பேர் அணியிடம் இல்லை.
எனவே,எதிரணிகள் ஊடாக இதற்கான நகர்வில் 11 பேர் அணி ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment