டக்ளஸ் அமைச்சராகப் பதவியேற்பு
அரசியல்இலங்கைசெய்திகள்

டக்ளஸ் உட்பட மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்?

Share

10 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய, ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

சு.கவின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி சுசில் பிரேம ஜயந்த, விஜயதாச ராஜபகச, டிரான் அலஸ், நளின் பெர்னாண்டோ, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, சஜித் அணி சார்பில் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கவுள்ளனர்.

சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்சவும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிலான் அலசும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்றிரவு (19) இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியதும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் டொக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரும் இன்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

எஞ்சிய அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் பிற்பகலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...