food mb
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்க ஒருவேளை உணவை தியாகம் செய்யுங்கள்!!!

Share

நாட்டில் அடுத்து வருகின்ற நாள்களில் ஒரு வேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்

இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்து மக்கள் இவ்வாறு ஒரு வேளை உணவை தியாகம் செய்வதன் மூலம் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் நாட்டையும் எதிர்கால சந்ததியினரையும் அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்லக் கூடியதாக அமையும்.

எனவே மூன்று வேளை உணவு உண்டு வந்தவர்கள் அடுத்து வருகின்ற சில நாள்களில் இருவேளை உணவு உண்ண வேண்டிய நிலை வரலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தியாகங்களை செய்தே வருகின்றனர்.

நாட்டின் தேசிய உற்பத்திகளை காக்கவும் ஊக்குவிக்கவுமே இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நாட்டில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்ளாடைகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

இதேவேளை இவரின் இந்தக் கருத்துக்கு பல தரப்புக்களிலுமிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. அத்துடன் சமூக வலைத்தளங்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...